வடக்கில் நடைபெறும் அரசாங்கத்தின் அனைத்துக் கூட்டங்களிலும் நோர்வேயின் உளவாளி ஒருவர் கலந்து கொள்வதாக சிங்கள ஊடகமொன்று செய்தி
வெளியிட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் பெண் அரசியல்வாதியொருவரே குறித்த நோர்வே உளவாளியை இலங்கைக்கு வரவழைத்து, யாழ்ப்பாணத்திற்கு அழைத்துக் கொண்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் இராணுவத்தளபதி ஒருவருடன் தனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக காட்டிக் கொள்ளும் குறித்த நபர், வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் தகவல்களை திரட்டி வருவது குறித்தும் இராணுவப் புலனாய்வாளர்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது.
அத்துடன் இவர் நோர்வே அரசாங்கத்தின் இணையத்தளம் ஒன்றையும் நடத்தி வருவதாகவும் அறியக் கிடைத்துள்ளது.