வடக்கு, கிழக்கு கூட்டமைப்பினரிடையே விஷேட கூட்டம்

202
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

எனினும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று  மாலை இடம்பெறும் அமர்விலேயே கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய சந்திப்பின் போது நாட்டில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு, மக்களின் வாழ்வாதார முன்னேற்றம், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE