வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், சமூக சேவைகள், புனர்வாழ்வு, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மகளிர் விவகார அமைச்சினால் நீண்டகாலமாக தற்காலிக, அமைய அடிப்படையில் 180 நாட்கள் கடமையை பூர்த்தி செய்தவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியிலே இடம்பெற்றது. இங்கு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த 384 பேர் தங்கள் நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொண்டனர்.