வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய மாகாண பணிமனையை திறந்து வைத்தார் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்.
கடந்த எழுபது ஆண்டுகளாக தமக்கென்று ஓர் சொந்த அலுவலகம் இல்லாது தமது பணிகளை ஆற்றிய வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண அலுவலகம், தற்போது தமது புதிய அலுவலகத்தை 25-08-2015 செவ்வாய் மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் குருநகரில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்தனர்.
இப் புதிய கட்டடத்தை வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் உத்தியோகபூர்வகமாக திறந்து வைத்தார்.
நிகழ்வில் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி மாகாண பணிப்பாளர் அலுவலகமும், பிரதம பொறியியலாளர் அலுவலகமும் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்விற்கு வடக்கு பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனய அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.