வடமராட்சியில் நியூமோனியா காய்ச்சல் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்

106

 

வடமராட்சியில் நியூமோனியா காய்ச்சல் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாடசாலை வீதி – துன்னாலை வடக்கு, கரவெட்டியை சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் வயது 29 இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் நேற்று (10.3.2024) வீட்டில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வைத்தியசாலை சில தினங்களுக்கு முன்னர் சிகிச்சை பெற்ற அவர் வீட்டில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

உடற்கூற்று பரிசோதனையில் நியூமோனியா தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE