வடமராட்சி, துன்னாலை கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே குறித்த பெண் நேற்று (19.12.2023) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட ஹெரோயின்
51வயதான குறித்த பெண் தனது ஆடைக்குள் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்துள்ளனர்.
இதன்போது அவரிடமிருந்து ஆறு கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை இன்று(20) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.