இன்றைய தினம் காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கையில் 6ஆயிரம் பொலிஸாருக்கான வெற்றிடம் காணப்படுகின்றது. இந்நிலையில் வடமாகாணத்தில் 1500 விண்ணபங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
இந்நிலையில் இவர்களுக்கான நேர்முகத்தேர்வு 10 ம் திகதி யாழ்.மத்திய கல்லூரியிலும்,11ம் திகதி வவுனியா காமினி வித்தியாலயத்திலும் நடைபெறும்.
வடமாகாணத்தில் வேலைக்கு இணைக்கப்படும் தமிழ் பொலிஸார் வடமாகாணத்திலேயே கடமையாற்றலாம் என்பதுடன் போர்காலத்தை போன்று அல்லாமல் தற்போது பொலிஸ் சேவை மிக இலகுவான துறையாக மாறியுள்ளது.
எனவே யாரும் அச்சமடைய தேவையில்லை என்பதுடன் ஆண், பெண் கொஸ்த்தாக்களாக பணியில் இணைக்கப்படும் வடமாகாண இளைஞர், யுவதிகள் தங்கள் மாகாணத்திற்கும், மக்களுக்கும் சிறப்பான சேவையாற்ற முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.