நெல்சிப் திட்டத்தின் ஊடாக வடமாகாணத்தில் 128.78 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 14 கட்டடங்கள் திறக்கப்படவில்லை. பாவனையில் இல்லாமல் இருக்கிறது என வடமாகாண சபை எதிர்கட்சித் தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 3 வருடங்கள் 9 மாதங்களின் செயற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்று நடை பெற்று வருகின்றது. இதன் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கடந்த 2013ஆம் ஆண்டு தொடக்கம் இன்றளவும் நெல்சிப் திட்டத்தின் கீழ் 128.78 மில்லியன் ரூபா செலவில் 14 கட்டடங்கள் வடமாகாணத்தில் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகும் நிலையில் அவை திறக்கப்படாத நிலையில் உள்ளது. இது எதற்காக என வடமாகாண சபை எதிர்கட்சித் தலைவர் சி. தவராசா கேள்வி எழுப்பியுள்ளார்.