வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்னோட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரவு – செலவுத் திட்டம் இன்று சனிக்கிழமை வடமாகாண சபையின் விசேட அமர்வின் போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்டது.
இதனையடுத்து, நிதிக் கூற்று அறிக்கை சபையின் அங்கீகாரத்திற்குவிடப்பட்ட நிலையில் எவ்விதமான எதிர்ப்பும் இல்லாமல் ஏகமனதாக சபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தகட்டமாக 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம், 16ஆம், 17 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் அறிவித்தார். இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான அமர்வு 10.30 மணிக்கு நிறைவடைந்தது. அடுத்த அமர்வு டிசெம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.