வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் உட்செல்ல விடாது இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

478

 

CV-Wigneshwaran

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் உட்செல்ல விடாது இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

 

வடமாகாண முதலமைச்சர் 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்படவுள்ள வசாவிளான் கிழக்குப் பகுதியை பார்வையிடுவதற்காக இன்று அப்பகுதிக்குச் சென்றுள்ளார்.

விடுவிப்பதாகக் கூறப்பட்ட 197 ஏக்கர் காணிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், இன்று அப்பகுதிக்குச் சென்ற வடக்கு முதலமைச்சரையும் இராணுவத்தினர் செல்ல விடாது தடுத்துள்ளனர்.

இராணுவத்தினரால் போடப்பட்ட புதிய உயர்பாதுகாப்பு வலய வேலியை தாண்டி முதலமைச்சரை உள்ளே செல்ல இராணுவத்தினர் இடமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,  விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் காணிகளை உள்ளடக்கியதாகவே இராணுவத்தினரால் புதிய வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

SHARE