தமிழ் மக்கள் அவையின் 2ம் அமர்வு இன்று காலை 10 மணிக்கு, யாழ்.பொதுநூலக கேட்போர்கூடத்தில் ஆரம்பமானது. இதில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டுள்ளார்.
இனப்பிரச்சினை தீர்வுக்கான தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் நிபுணர் குழுவை உருவாக்குதல், ஜ.நா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதை அவதானிப்பதற்கான குழுவை உருவாக்குதல், மற்றும் கலை,கலாச்சார விடயங்களை கையாள்வதற்கான குழுவை உருவாக்கல் போன்றவற்றுக்காக தமிழ் மக்கள் அவை இன்று 2ம் அமர்வை நடத்துகின்றது.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற சர்ச்சைக்கு மத்தியில் இன்று கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.