வத்தளை ஒல்லியமுல்லவில் தமிழ்ப் பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்றுக் காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென மேடையை நோக்கிச் சென்ற சில பௌத்த குருமார் அங்கு தமிழ் பாடசாலை அமைப்பதற்கு தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இது சிங்களவர்கள் வாழும் பிரதேசம் என்றும் பாடசாலை அமைப் பதால் பக்கத்தில் உள்ள மைதானத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு, எமது பிரதேச பிள்ளைகள் விளையாடுவதற்கு மைதானம் இல்லாமல் போய் விடுமென்றும் நிகழ்வில் பிர தம அதிதியாக கலந்து கொள்ள வருகை தந்திருந்த அமைச்சர் ஜோனிடம் பௌத்த குருமார் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஒலியமுல்ல சந்தியில் அப் பிரதேசத்தின் சிங்கள மக்கள் தமிழ் பாடசாலை அமைப்பதற்கு எதிராக கைகளில் பதாதைகளை ஏந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“இதுவா உங்களின் நல்லிணக்கம் நல்லாட்சி இதுவா” எனது ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பும் விதத்திலான பதாதைகளை கையில் ஏந்தியிருந்தார்.
ஒலியமுல்ல சந்தியில் ஆர்ப்பாட்டம் நடத்திய கூட்டத்தினர் நிகழ்ச்சி இடம்பெற்ற மேடைக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதோடு அமைச்சர் ஜோனுக்கு எதிராகவும் கூச்சலிட்டனர்.
இதன்போது பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தி ஆர்ப்பாட்டக்
காரர்கள் மேடைக்கு அருகில் செல்வதை தடுத்து நிறுத்தினார். பின்னர் அமைச்சர் ஜோன் அமரதுங்க உட்பட நிகழ்வில் கலந்துகொண்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதன்பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் விழா மேடையில் அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் புகைப்படத்துடன் தொங்க விடப்பட்டிருந்த பதாதைகளை செருப்புக்களினால் தாக்கி தீவைத்து கொளுத்தினர்.