வன்னிக் குரொஸ் கலாச்சாரப் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு

349

 

வன்னிக் குரோஸ் கலாச்சாரப் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு 21.02.2016 அன்று காலை10.30 மணிக்கு வைமன் முன்பள்ளி மரநிழலில் வன்னிக் குரோஸ் கலாச்சாரப் பேரவையின் தலைவர் திரு.சி.நாகேந்திரராசா தலைமையில் நடைபெற்றது.
7f5ef62f-4436-405f-ab9c-cfb28ccf153d 2419c36d-9ea5-4f58-b729-48c3cb4477df 8136f614-5615-4ab8-aae6-9a8f0fb6de20 e2cddc25-0e15-4bb4-84cd-4ad5e484ff4d
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னிக் குரோஸ் கலாச்சாரப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் வன்னிமாவட்ட பாராளுமi;ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் மற்றும் சிறப்பு விருந்தினராக சர்வதேச வன்னிக் குரோஸ் கலாச்சாரப் பேரவையின் இணைப்பாளர் திரு.தவசீலன் (லண்டன்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மங்கள விளக்கினை வன்னிக் குரோஸ் கலாச்சாரப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் வன்னிமாவட்ட பாராளுமi;ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன், சர்வதேச வன்னிக் குரோஸ் கலாச்சாரப் பேரவையின் இணைப்பாளர் திரு.தவசீலன், வன்னிக் குரோஸ் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முல்லைமாவட்ட தலைவர் திரு.க.நீதன், வன்னிக் குரோஸ் கலாச்சாரப் பேரவையின் வன்னிமாவட்ட இணைப்பாளர் திரு.ச.ரூபன், வன்னிக் குரோஸ் கலாச்சாரப் பேரவையின் வன்னிமாவட்ட நிர்வாக உறுப்பினர் திருமதி.சந்திரகலா, வன்னிக் குரோஸ் கலாச்சாரப் பேரவையின் வன்னிமாவட்ட ஆலோசகர் திரு.செ.சுதாகரன் மற்றும் பண்டாரவன்னியன் அறங்காவல் கழகத்தின் உறுப்பினர் திரு.சர்வானந்தராசா ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து கலை, கலாச்சாரத்தை கட்டியெழுப்பும் கருத்துக்களை புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் திரு.பிரதீபன், வன்னிக் குரோஸ் கலாச்சாரப் பேரவையின் வன்னிமாவட்ட இணைப்பாளர் திரு.ச.ரூபன், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் அதிபரும்; வன்னிமாவட்ட நிர்வாக உறுப்பினருமான திரு.ரவீந்திரராசா, சர்வதேச இணைப்பாளர் திரு.தவசீலன் (லண்டன்), முல்லைமாவட்ட இணைப்பாளர் திரு.மணியம், முல்லைமாவட்ட செயலாளர் திரு.வேதவனம் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
மேலும் வன்னிக் குரோஸ் கலாச்சாரப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் வன்னிமாவட்ட பாராளுமi;ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் சிறப்புரையாற்றுகையில் பாரம்பரிய கலை, கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் முகமாக கலை, கலாச்சார போட்டி நிகழ்வுகளாக நடாத்தி அண்ணாவிமார்கள், கலைஞர்கள் மற்றும் கலை மன்றங்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகள் நடாத்ததப்படும் எனக் கூறினார்.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், வன்னிக் குரோஸ் கலாச்சாரப் பேரவையின் நிர்வாக உறுப்பினர்கள், அண்ணாவிமார்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
SHARE