வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுக்களின் தலைவர் மற்றும் இணைத்தலைவர் பதவிகள் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மூன்று மாவட்டங்களின் பிரதேச மட்ட அபிவிருத்தி குழுக்களின் இணைத் தலைவராகவும், மூன்று மாவட்டங்களின் அபிவிருத்தி குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, வன்னித் தேர்தல் தொகுதியின் இணைத் தலைவர்களாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் றிசாட் பதியுதீன், கே.கே.மஸ்தான் எம்.பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, இவர்களுடன் மன்னார் மாவட்டத்திற்கு கூட்டமைப்பின் சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, வவுனியா மாவட்டத்திற்கு கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கூட்டமைப்பின் சிவமோகன் எம்.பி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவராக கே.கே.மஸ்தான் எம்.பி நியமனம்
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்தி குழுக்களின் இணைத்தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,