மனிதர்களின் வயது முதிர்ச்சி அடைவதை தடுத்து நீண்டகாலமாக வாழ வைக்கும் மருந்தை அடுத்த மாதம் மனிதர்களின் உடலில் செலுத்தி பரிசோதிக்க முடிவு செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள St. Louis நகரில் உள்ள Keio மற்றும் Washington பல்கலைக்கழங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மனிதர்களுக்கு வயது கூடுவதை தடுத்து நிறுத்தும் nicotinamide mono nucleotide (NMN) என்ற மாத்திரையை விஞ்ஞானிகள் கடந்த சில ஆண்டுகளாக எலிகளின் உடலில் செலுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்த பரிசோதனையின் முடிவில், எலிகளுக்கு வயது கூடவில்லை என்றும், இந்த மருந்து நல்ல முறையில் செயல்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எலிகளின் உடலில் நல்ல பலனை ஏற்படுத்திய இந்த மாத்திரையை மனிதர்களின் உடலில் செலுத்தி பரிசோதிக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
இதன் அடுத்தக்கட்டமாக, ஆரோக்கியமாக உள்ள 10 தன்னார்வ மனிதர்களின் உடலில் இம்மருந்தை செலுத்தி பரிசோதிக்க அனுமதி கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து Shinichiro Imai என்ற விஞ்ஞானி பேசியபோது, ‘அடுத்த மாதம் இப்பரிசோதனையை நிகழ்த்த தயாராக உள்ளோம். எலிகளின் உடலில் இம்மருந்து நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஆனால், மனிதர்களின் உடலில் இது எவ்வித மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக கூறமுடியாது.
எனினும், பரிசோதனைக்கு பிறகு சாதகமான முடிவுகள் ஏற்பட்டால், இம்மாத்திரைகள் முறையான அனுமதிக்கு பிறகு விற்பனைக்கு சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.