வரணியில் சித்திரவதை முகாம் – கைதிகளை விடுதலை செய்வதில் அரசுக்கு விருப்பம் இல்லை! சுரேஸ்

332

 

தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு அடிப்படையில் விடதலை செய்வதற்கு அரசாங்கத்தினால் இயலாது எனபது புலன்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பபின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் வழக்குகளை விசாரணை செய்வதற்கென விசேட மேல் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தது லங்காசிறி செய்திச் சேவைக்கு இன்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்படுவார்கள் எனக் கூறி வந்த தற்போதைய அரசாங்கம் பின்பு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதனூடாக தமிழ் தேசிய கூட்டமைப்பபு கேட்டுக்கொண்டதற்கிணங்க அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் நல்லிணக்கப்பாட்டிற்கு அரசாங்கத்தினர் வருவார்கள் என தாம் எதிர்பாரக்கப் போதில்லை எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.

அத்துடன் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யும் உத்தேசம் அரசாங்கத்திற்கு இல்லை என்பதனையும், விருப்பம் இல்லை என்பதனையும் இந்த விசேட நீதிமன்றம் தெளிவாக காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தமிழ் மக்கள் மற்றும் அரசியல் கைதிகளின் நோக்கம் இவ்வாறான நீதிமன்றங்கள் அல்ல மாறாக பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்படுவதே என்பதனையும் தாம் வலியுறுத்துவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை விராரணை செய்வதற்கென இவ்வாறான விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் – வரணியில் சித்திரவதை முகாம்

யாழ்ப்பாணம் – வரணி பகுதியில் இராணுவத்தின் 526ஆவது படையணி நிலைகொண்டிருந்த வரணி படைமுகாமில் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த தனியார் காணிகளை விடுவித்தல் எனும் செயற்பாட்டில் தனியாருக்குச் சொந்தமான காணியில் அமைந்திருந்த வரணி படைமுகாமை, இராணுவத்தினர் கடந்த 2014  ஆம் ஆண்டு மே மாத நடுப்பகுதியில் விட்டு வெளியேறியதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது குறித்த முகாம் A-9 வீதிக்கு அருகில் ஆசைப்பிள்ளை ஏற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முகாம் வரணியில் அமைக்கப்பட்டிருந்த போது விசாரணைக்கு என அழைத்து வரப்பட்ட மக்கள் குறித்த முகாமில் வைத்து பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இராணுவத்தினரின் சித்திரவதைகளை வெளிக்கொணரும் வகையில் குறித்த முகாம் விடுவிக்கப்பட்டபொழுது அங்கிருந்த சித்திரவதைக் கூடம் ஒண்றைக் காணமுடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

SHARE