2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான ஐந்தாம் நாள் விவாதம் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமானது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த திங்கட்கிழமை வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார்.
இதனை அடுத்து 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமானது.
இதற்கிடையில், வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி, மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 3,415 பில்லியன்கள் என்றும் மொத்த செலவு 5,819 பில்லியன் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை இந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட 9.8 சதவீதத்திலிருந்து அடுத்த ஆண்டு 7.9 சதவீதமாகக் குறைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நவம்பர் மாதம் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி முதல் 13 நாட்கள் நடைபெபெற்று செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.