ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதன்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு தமது கட்சி ஆதரவளிப்பதா அல்லது எதிராக செயற்படுவதா என்பது குறித்து இதுவரை எவ்வித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என சந்திப்பில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான தீர்மானத்தை எட்டும் வகையில் எதிர்வரும் நாட்களில் மற்றுமொரு சந்திப்பும் ஜனாதிபதியுடன் நடாத்தப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கட்சியின் எதிர்கால நோக்கு தொடர்பிலும் இன்றைய தினம் ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.