


வடக்கில் 5960 ஏக்கர் கபளீகரம் செய்ய வெளியிட்ட வர்த்தமானியை இரத்து செய்ய இன்றைய அமைச்சரவையில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த்தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் போராட்டம், குறிப்பாக தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி நாடாளுமன்ற கொண்டுவந்த பிரேரணை மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் (சைக்கிள் )தலைவர்கள் சர்வதேச நாடுகளின் தூதுவர்களை இடைவிடாது தொடர்ச்சியாக சந்தித்து வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சர்வதேசத்தின் அழுத்தத்தை அடுத்து வடமாகாணத்தில் புலம்பெயர் மற்றும் உள்ளூர் தமிழ்மக்களின் 5000 ஏக்கர் காணிகளை சிறீலங்கா பாதுகாப்பு படைகளின் தேவைகளுக்காக அபகரிப்பது தொடர்பாக விடுக்கப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் வாபஸ் பெறவுள்ளதாக தெரியவருகின்றது