வவுனியாவின் தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு கையொப்பமிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் பல்டி அடிப்பது ஏன்?

256

கடந்த 24.04.2016 அன்று வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணி ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு த.தே.கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாணசபையின் உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், இதில் குறிப்பிடப்பட்ட ஒருசிலர் தற்பொழுது வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு எதிராகச் செயற்படுவதில் பல அரசியல் பின்னணிகள் இருக்கின்றது. மான்புமிகு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் ஒரு பகுதியை இங்கு தருகின்றோம்.

24.04.2016.
வவுனியா.

மான்புமிகு முதலமைச்சர் அவர்கட்கு,
வடமாகாணம்.

வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மத்திய மையம் அமைப்பதற்கான

காணி ஒதுக்கீடு தொடர்பானது

மேற்படி விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் இன்று 24.04.2016 ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் உள்ள சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வன்னித்தேர்தல் மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மேற்படி திட்டத்திற்கான காணி ஒதுக்கீடு தொடர்பில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும், இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூபா 200 மில்லியன் வேறு மாவட்டத்திற்குச் செல்லாது இருப்பது தொடர்பிலும் மிகுந்த கரிசணையுடன் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ சுகாதார அமைச்சர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் மத்திய கிராமிய பொருளாதார அலுவலக அமைச்சர் கௌரவ.ஹரிசன் அது தொடர்பில் கலந்துரையாடியபோது அமைச்சின் இடத்தெரிவு கொள்கைக்கு அமைய ஓமந்தை மாணிக்கவளவினில் இந்த இடத்தை நடைமுறைப்படுத்த மறுப்புத் தெரிவித்ததாகக் கோரப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் ஏகமனதாக பின்வரும் தீர்மானங்கள் எடுத்துள்ளனர்.

1. மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் மத்திய அமைச்சர் கௌரவ ஹரிசன் அவர்களுடன் கௌரவ முதலமைச்சர் கலந்துரையாடி ஓமந்தை மாணிக்கவளவுப் பகுதியில் மேற்படி பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்தல்.
2. ஓமந்தையில் அமைப்பதற்கான அனுமதி மத்திய அரசினால் மறுக்கப்படும் இடத்தில் இத்திட்டத்தை வேறு மாவட்டத்திற்கு கைநழுவ விடாதவகையில் வவுனியா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தும் முகமாக தாண்டிக்குளம் அரச பண்ணையில் மேட்டு நிலத்தை மேற்படித் திட்டத்திற்கு வழங்குவதற்கு முதலமைச்சர் அனுமதி வழங்குதல். என்ற தீர்மானமே அங்கு எடுக்கப்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், இ.சாள்ஸ், திருமதி.சிறிஸ்கந்தராசா, டெலோ அமைப்பு சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதராதலிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான எம்.பி.நடராஜா, ஜி.ரி.லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன், மயில்வாகனம் தியாகராசா, வடமாகாண சபை அமைச்சரான பா.சத்தியலிங்கம், சி.க.கூ சமாசத் தலைவர் நா.சேனாதிராசா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இந்தப் பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பில், ஆரம்பகட்டத்தில் அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களே இதனை வழுவாக முன்னெடுத்தார். அவர்களுடனான நேரடி நேர்காணலின் பொழுது இந்த வர்த்தகமையம் அமைப்பது தொடர்பிலான ஆரம்பத்திலிருந்து முடிவுவரையான பேச்சுக்கள் தொடர்பிலும், இதனுடைய அரசியல் பின்னணி தொடர்பிலும் தன்மீது பல அரசியல் கட்சிகள் சேறு பூசும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர் என்றும், இவ் பொருளாதார மத்திய மையம் அரசியல் மயமாக்கப்பட்டதன் பின்னணியினாலேயே கட்டிட நிர்மான வேலைகளை செயற்படுத்த முடியாத நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கும் தனக்குமிடையில் பல இலத்திரணியல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் போன்றவற்றில் செய்திகளைத் திரிபுபடுத்தி இவ் பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பில் சிக்கல்களை உருவாக்கியுள்ளன.

பதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் அரசியல்வாதிகளை விமர்சிக்கின்றன. பாராளுமன்ற சிறப்புரிமை, மாகாணசபை சிறப்புரிமை சட்டத்திற்கேற்ப இவர்கள் மீது வழக்குத் தொடர முடியும்;. இதைவிட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையேயும் இந்த முகவரியற்ற இலத்திரணியல் ஊடகங்கள் தோற்றுவித்துள்ளன. ‘என்னைப் பொறுத்தவரையில் ஹரிசனுடைய தீர்மானங்களுக்கு அமைய ஓமந்தையில் அவர் விருப்பம் தெரிவித்தால் இப்பொருளாதார மத்திய மையத்தை அங்கு அமைக்கலாம். அல்லது அவரது தெரிவு தாண்டிக்குளமாக இருந்தால் அங்கும் அமைக்கலாம். எப்படி அமைக்கப்பட்டாலும் வவுனியா மாவட்டத்தை உள்ளடக்கியதாகவே இவ்பொருளாதார மத்திய மையம் அமையப்பெறும். அதில் எனக்கு ஆட்;சேபனையில்லை. என்னை மக்கள் மத்தில் மூன்றாம் தரப்பாக காட்ட பல அரசியல்வாதிகள் விளக்கமின்றி முனைகின்றனர். றிசாட் பதியூனிடம் கோடிக்காணக்காக பணம் கைமாறியதாகக் கூறுகின்றனர். உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுகின்ற ஊடகங்கள் தமிழ் மக்களுடைய தேவைகளை இணங்கண்டு அவர்களுடைய விருப்பு, வெறுப்புக்களை இணங்கண்டு செய்திகளை வெளியிடுதல் வேண்டும். நீங்கள் அரசியல்வாதிகள் பின்னால் கொடிபிடித்து ஒருவரை உயர்த்தி மற்றவரைத் தாழ்த்தி செயற்படுவதன் ஊடாக ஊடகத் தர்மத்தினைக் குழிதோன்றிப் புதைக்கின்றீர்கள்.

அரசியல்வாதிகளினுடைய அரசியல் பயணம் என்பது ஐந்து வருடமோ, பத்துவருடமோ அல்லது சுயநல அரசியலை லாபம் கருதி செய்துவிட்டு, அதன் பின் மக்கள் பற்றி சிந்திக்காது, தமது குடும்ப நல அக்கறையுடன் செயற்பட்டு பாராளுமன்றத்திலிருந்தோ, மாகாணசபையிலிருந்தோ ஒதுங்கி நிம்மதியாக வாழ்வார்கள். நான் தொடர்ந்தும் மக்கள் சேவையிலேயே இருந்து வரும் ஒருவன். அதனையே அரசியலுக்கு வருவதற்கு முன்பும் செய்துகொண்டிருந்தேன். அரசியலுக்கு அப்பால் மக்களது விருப்பு வெறுப்பு என்ன என்பது எனக்கு நன்கு தெரியும். இவ் பொருளாதாரம் மத்திய மையம் அமைப்பது தொடர்பில் விமர்சனங்களை விட்டுவிட்டு தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து இதற்கான முடிவினை மேற்கொள்ளவேண்டும். வவுனியாவின் எப்பிரதேசத்தில் இவ்வர்த்தகமையம் அமைந்தாலும் எனக்கு ஆட்சேபனையில்லை. இங்கு பொருளாதார மத்திய மையத்தினை அமைப்பதற்கு யாழ் தலைமைகளோ, தென்னிலங்கை அரசியல்வாதிகளோ தலையிடவேண்டிய அவசியமில்லை. வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும், மக்கள் பிரதிநிதிகளும் தீர்மானித்து இரண்டு கிலோமீற்றர் சுற்றளவுக்குள் ஒரு இடத்தைத் தெரிவு செய்து கொடுத்திருந்தால் அவ்விடம் சிபார்சு செய்யப்பட்டு அதில் வர்த்தகமையம் அமைப்பதற்கான வேலை ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.

வவுனியா பிரதேத்தில் இவ் வர்த்தக மையம் அமையப்பெறாமல் இருப்பதற்கும், வேறு இடத்திற்குக் கொண்டு செல்வதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் வர்த்தக அமைப்புக்களும், விவசாய அமைப்புக்களும் தீர்மானங்களை எடுத்து இவ்வர்த்தக மையத்தை ஓமந்தையிலோ, தாண்டிக்குளத்திலோ அமையுங்கள் என்று ஒற்றுமையாகக் கூறமுடியாத நிலையிலுள்ளனர். யாழ் மாவட்ட அரசியல்த் தலைமைகளும், தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் இதற்குள் மூக்கை நுழைத்து தமது அரசியலை நடத்துகின்றனர். இதற்கு இடமளித்தது வன்னித் தலைமைகளே. அதிகாரபூர்வமான முடிவை ஏன் உங்களால் ஏன் எடுக்கமுடியாது போனது, நீங்கள் அவர்களைவிட அரசியல் அனுபவம் குறைந்தவர்களா? யாழ் அரசியல் தலைமைகளும், தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் வன்னி அரசியலை மட்டம் தட்டுகின்றார்களா? இதற்குள் பல விடயங்கள் மறைந்திருக்கின்றது. அன்று கையெழுத்திட்ட வன்னித் தலைமைகள் அனைத்தும் இன்று வவுனியாவில் பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பில் ஏன் முரண்பட்டு நிற்கின்றார்கள் என்பது மக்களாகிய உங்களுக்குப் புரியும். ஓமந்தையா? தாண்டிக்குளமா? என்பது அல்ல இங்கு பிரச்சினை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Wiggi2Sathiyalingam-600x338

625-2 economic-zone-vavuniya vv2viki-samsum

 

SHARE