வவுனியாவில் இன்று மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

335

வவுனியாவில் இன்று மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

வவுனியா இறம்பைக்குளம் அருந்ததி மண்டபத்தில் இன்று ( 15.10.2015 ) காலை 10.30 மணி அளவில் மீனவர் சங்க ஊடகசந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. எஸ். சிவமோகன், திரு. சிவசக்தி ஆனந்தன், திரு. செல்வம் அடைக்கலநாதன், திரு. சாள்ஸ், திரு. மாவை சேனாதிராஜா  , திரு கே.கே மஸ்தான் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் வடபகுதியின் யாழ்ப்பாணம் மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் மீனவ பிரச்சினை தொடர்பாக பேசப்பட்டது. இதில் இந்திய மீனவர்கள் சட்டபூர்வமற்ற முறையில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதாகவும் அது மட்டுமல்லாது இலங்கை மீனவர்கள் அரசியல்வாதிகளின் பலத்தினால் இவர்களும் சட்டவிரோதமான முறையில் மீன் பிடிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான சட்டவிரோத மீன்பிடிப்பு நடவடிக்கைகளை தானும் நேரில் சென்று பார்த்ததாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. எஸ் சிவமோகன் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

SAM_0862

SAM_0790

SAM_0849

SAM_0794

 

 

 

 

 

SHARE