வவுனியாவில் இரண்டு தமிழ்   குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு.

210

 

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால், வவுனியாவில் உள்ள வறிய நிலையில் உள்ள இரண்டு தமிழ் குடும்பத்திற்கு இன்றையதினம் வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

வன்னி பாதுகாப்புபடைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரெராவின் ஆலோசனை வழிகாட்டலில், குருநாகலை சேர்ந்த சந்தன அழககோன், மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ மேயர் ஆகியோரின் நிதி உதவியுடன் இரண்டு வீடுகள் அமைக்கபட்டு இன்றையதினம் 10.4 வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா கணேசபுரம் பகுதியில் வசிக்கும் நிவர்சனா, மற்றும் பம்பைமடு பகுதியில் வசிக்கும் மூர்த்தி ஆகியோருக்கே இவ்வாறு வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த குடும்பத்தினர் வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்ந்து வந்த நிலையில் ராணுவத்தின் நல்லெண்ண நோக்குடன் வீடுகள் அமைக்கப்பட்டு வீட்டிற்கு தேவையான நாற்காலிகள், மேசைகள், சமையல் உபகரணங்கள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளதுடன், வீட்டுதோட்டம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

கணேசபுரத்தில் வசிக்கும் குறித்த வீடு வழங்கப்பட்ட மாணவியான நிவர்சனா வறுமை நிலையிலும் கடந்த வருடம் நடைபெற்ற புலமைபரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார்.

அவர் உயர்தரம் வரைக்கும் கற்பதற்கான கல்வி செலவிற்காக வன்னி கட்டளை தளபதி குமுதுபெரொவின் ஆலோசனைக்கமைய மாதாந்தம் 2500 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

SHARE