கண் பார்வையில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கான சிகிச்சைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்படுகிறது.
இதன்படி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஆலோசனைக்கு அமைய, வவுனியா பொது வைத்தியசாலையில் குறித்த கண்புரை சத்திரசிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில், கண்புரை காரணமாக பாதிக்கப்பட்ட 1200 பேருக்கு இந்த இலவச சத்திர சிகிச்சை நடத்தப்படுகிறது.
இந்திய வைத்தியர்களின் வருகை
எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இந்த இலவச கண்புரை சத்திரசிகிச்சை முகாம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி வவுனியா, சிலாபம், முல்லைத்தீவு ஆகிய வைத்தியசாலைகளை சேர்ந்த மூன்று வைத்தியர்களுடன் இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ள மூன்று வைத்தியர்களும் இணைந்து இந்த சத்திர சிகிச்சைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்திய துணை தூதரக உதவி
மலேசியாவின் தனியார் நிதியம் ஒன்றின் அனுசரணையுடன் இந்த இலவச கண் சத்திரசிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது.