வவுனியாவில் இளைஞர்களுடன் இணைந்து விளையாடிய சுவிஸ், ஜேர்மனி உயர்ஸ்தானிகர்கள்

250

ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தின் கிழக்கு மாகாண இளைஞர் பன்மைத்துவம் என்னும் செயற்பாட்டின் அடிப்படையிலான விளையாட்டு கலை நிகழ்வுகளும் திருகோணமலையில் நேற்று நடத்தப்பட்டது.

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

ஜேர்மன் குடியரசின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரொக்டி, மற்றும் சுவிஸ்சர்லாந்து நாட்டு இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர் கலாநிதி ஹென்ஸ் வொக்கர் நிடிர் கூன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

வவுனியா டொன் பொஸ்கோ தொழில் பயிற்சி நிலையம், கிண்ணியா, கந்தளாய், வெருகல் ஆகிய இடங்கிளில் உள்ள தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள், தேசிய கைத்தொழில் அதிகார சபை பயிற்சியாளர்கள். என 650க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதில் பங்கு கொண்டார்கள்.

அஞ்சல் ஓட்டம், தடை அஞ்சல், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம், கயிறு இழுத்தல் போட்டிகள் இவர்களுக்கு இடையே நடத்தப்பட்டது.

உயர்தானிகர்கள் இருவரும் இளைஞர்களுடன் இணைந்து போட்டி நிகழ்வுகளிலும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90

SHARE