வவுனியாவில் சிறு நீர் முகாமைத்துவ பொருட்கள் அன்பளிப்பு
வவுனியாவில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்தில் வடக்கு
மாகாணத்திற்கான முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு இன்று
28-08-2015 வெள்ளிக்கிழமை சிறு நீர் முகாமைத்துவப் பொருட்கள்
வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம்
அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய
பிரதேசத்திலிருந்து முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்ட்டவர்கள்; வருகை
தந்திருந்தனர். இந்நிகழ்விற்கு மோட்டிவேசன் நிறுவனத்தினர் அனுசரணை
வழங்கியிருந்தனர். மோட்டிவேசன் நிறுவன பணிப்பாளர், வைகறை
முகாமையாளர், ஆயுள்வேத வைத்திய அத்தியட்சகர், மாவட்ட சமூகசேவைகள்
உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணிமனை வைத்தியர், வரோட்
நிறுவனத்தின் பணிப்பாளர், ஆகியோர் வருகைதந்திருந்தனர்;.