ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 8வது மாநாடு வவுனியா கோவிற்குளம் , ஆதி திருமண மண்டபத்தில் நேற்று ( 22.05.2016) நடைபெற்றது.
இந் நிகழ்வில் புளோட் அமைப்பின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினமான த.சித்தார்த்தன் , மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் , வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
புளோட் அமைப்பின் செயலதிபர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கிருந்து ஊர்வலமாக சென்று உமாமகேஸ்வரன் சந்தியில் அமைந்துள்ள ஆதி திருமண மண்டபத்தில் மாநாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
தகவலும் படங்களும் :- காந்தன்