வவுனியாவில் தமிழ் பெண் வேட்பாளர் ஆதரவாளர் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்-

372

 

வவுனியாவில் தமிழ் பெண் வேட்பாளர் ஆதரவாளர் மீது சிங்கள

காடையர்கள் தாக்குதல்-

unnamed

வவுனியா ஓமந்தை பகுதியில் வைத்து தமிழ் பெண் வேட்பாளர் மற்றும்

அவருடைய ஆதரவாளர்கள் பயணித்த வாகனத்தை வழிமறித்து சிங்கள காடையர்கள்

தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது

நேற்றைய தினம் 13-08-2015 மாலை 6.00 மணியளவில் தேர்தல்

பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு வவூனியா நோக்கி வந்து கொண்டிருந்த

அகில இலங்கை தமிழர் மகா சபை கட்சியின் முதன்மை வேட்பாளர் செல்வராணி

பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்து வந்த பெரும்பான்மையினைத்த சேர்ந்த

மூன்று சிங்கள இளைஞ்ஞர்கள் வாகனத்தை வழிமறித்து வேட்பாளரது

ஆதரவாளர்கள் காடைத்தனமாக தாக்கப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அகில இலங்கை தமிழர் மகா சபை

கட்சியின் பெண் வேட்பாளர் செல்வராணி வவூனியா ஓமந்தை பொலிசாpடம்

தாக்குதல் சம்பவம் குறித்து முறையிட்ட போதும்; தங்கள் மீது தாக்குதல்

மேற்கொண்;ட சிங்கள இனைஞ்ஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

என தெரிவித்த அவர் வவூனியாவிலிருந்து அனுராதபுரம் வரை சிங்கள

இளைஞ்ஞர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிசார் தங்களை அச்சுறுத்தி

வெளியேற்றியதாக தெரிவித்தார்.

SHARE