வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியும் லண்டன் ஜெயாஞ்சலி
நிறுவனமும் இணைந்து வழங்கிய நாட்டிய பெருவிழா நேற்று 02-08-
2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் வவுனியா நகரசபை
கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வை தென்னிந்திய நடனத்துறை சார்ந்த வெள்ளித்திரை, சின்னத்திரை
கலைஞ்ஞர்களுடன் சுவிஸ் நோர்வே, டென்மார்க் மற்றும் இலங்கை
கலைஞ்ஞர்கள் இணைந்து வழங்கியிருந்தனர்.
நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வவுனியா மாவட்ட பிரதேச
செயலாளர் க.உதயராசா, தமிழ் மணி அகளங்கன், கலாசார உத்தியோகத்தர்
இ.நித்தியானந்தன், மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா மற்றும்
இந்தியாவின் ஊடகவியலாளர் சேயில்பாண்டியன் ஆகியோர்
கலந்துகொண்டனர்.