வவுனியா பிரதேச சிவில் பாதுகாப்பு குழு கூட்டங்கள் பயனற்றுப்போவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,
வவுனியா பிரதேச செயலகத்தில் ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் சிவில் பாதுகாப்புகுழு கூட்டம் இடம்பெற்று வருகின்றது.
ஆரம்ப நாட்களில் பயனுள்ள செயற்பாடுகளை இதனூடாக முன்னெடுக்க கூடியதாக இருந்தது.
குறிப்பாக பிரதேச செயலாளர், நகரசபை செயலாளர், பொலிஸ் உயரதிகாரிகள் என பலரும் இதில் கலந்து கொள்வதனால் பல சமூக விடயங்கள் தொடர்பாக தீர்வுகள் காணப்பட்டு வந்தது.
எனினும் தற்போது இக் கூட்டங்களில் உயரதிகாரிகள் எவரும் பங்கேற்காமையினால் பயனற்ற கூட்டமாக இது மாறியுள்ளதுடன் பலர் வேலைப்பழுக்களுக்கு மத்தியில் சமூகமளிக்க வேண்டியேற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தினை பயனுள்ள கூட்டமாக மாற்றி பிரச்சனைகளுக்கு தீர்வை பெறக்கூடிய களமாக மாற்றவேண்டும் எனவும் அவர்கள் கோருகின்றனர்.