வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த மோ.பிரியா என்கிற தமிழர் விடுதலைக்
கூட்டணியின் வேட்பாளரின் ஆதரவாளர்களை இன்று 03-08-2015 மதியம்
பொலிசார் அச்சுறுத்தியதாக தெரியவருகிறது.
சம்பவம் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் மோ.பிரியா
தெரிவிக்கையில் தனது வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது
அங்கு சமூகமளித்த பொலிசார் குறித்த வேட்பாளரின் பெயரை குறிப்பிட்டு
கேட்டதுடன் வேட்பாளரின் ஆதரவாளர்களிடமிருந்த துண்டுபிரசுரங்களை பறிமுதல்
செய்ததுடன் ஆதரவாளர்களை கைது செய்ய முயற்சித்ததாகவும் வேட்பாளர் சம்பவ இடத்திற்கு
சென்றதையடுத்து பொலிசார் அவ்விடத்தை விட்டு சென்றதாகவும் தெரிவித்த அவர் சில
அரசு சார்பு வேட்பாளர்களின் அருவருடிகளாக பொலிசார் செயல்ப்படுவதாக
குற்றஞ்சாட்டினார்.
மேற்படி சம்பவம் குறித்து வவுனியா பொலிசாரிடம் கேட்டபோது வேட்பாளர்கள்
துண்டு பிரசுரங்களை வினியோகிக்க தடை இல்லையென தெரிவித்த அவர்கள் போஸ்டர்கள்
ஒட்டுவது மாத்திரமே தண்டனைக்குரிய குற்றமென தெரிவித்தனர்.