வவுனியாவில் பெரும் சோகம்… ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்

102

 

வவுனியாவில் ரயில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (17-03-2024) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற கடு கதிப் புகையிரதம் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் பயணித்த போது புகையிரதக் கடவைக்குள் நுழைந்த ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவத்தில் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஜெயக்கொடி ஆராச்சி ராஜரட்ண என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

SHARE