முன்னாள் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மூன்று தடவை பதவி வகித்த
தா. சிவசிதம்பரத்தின் சிலை இன்று (25.7) திறந்து வைக்கப்பட்டது.
இவரின் ஞாபகார்த்தமாக வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில்
மக்கள் சேவை மாமணி நா. சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
முன்னாள் மாவட்ட சபை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மு. சிற்றம்பலம் சிலையை
திறந்து வைத்தார்.
இதேவேளை கலாபூசணம் செ. தேவராசா மலர் மாலை அணிவித்ததுடன் முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள். பாராளுமன்ற
வேட்பாளாகள் பொது மக்கள் என பலரும் மாலை மற்றும் மலர் தூவி
திருவுருவச்சலைக்கு அஞ்சலி செலுத்தினர்.