வவுனியா இ.போ.ச.சாரதி மீது மதுபோதையில் வந்து தாக்குதல். வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற இ.போ. ச. சாரதி மீது வீரபுரம் பகுதியில் வைத்து மதுபோதையில் வந்த வவுனியா பொது மருத்துவமனையில் பணிபுரியும் தாதியர் தாக்குதல் நடத்திய சம்பவம் நேற்று முன்தினம் 28.08.2015 மாலை 7.30 இடம்பெற்றுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா மத்திய பேரூந்த நிலையத்திலிருந்து செட்டிகுளம் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற இ.போ.ச சாரதி பட்டாணிச்சூர் பகுதியில் வைத்து கையேஸ் வாகனத்தில் வந்த வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர் பேரூந்து சாரதியை அவதூறாக பேசியதுடன் தரிப்பிடத்தில் அவரின் உறவினை ஏற்றாமல் சென்றுவிட்டதாகவும் கூறி சாரதியை கடுமையான வார்த்தைகளினால் பேசிவிட்டு சென்றுள்ளார்.இரவு 7.30மணிக்கு பேரூந்து வீரபுரம் பகுதியிலிருக்கும் பயணிகள் தரிப்பிடத்தில் பயணிகளை இறக்கிக்கொண்டிருக்கும் போது குறித்த நபர் மதுபோதையில் சாரதி ஆசன கதவினை திறக்கும்படி கூறி றகளையில் ஈடுபட்டதுடன் சாரதியை கடுமையாக தாக்கியும் உள்ளார். சாரதி தாக்கப்படுவதை அறிந்த நடத்துனர் இருவரையும் சாமாதானப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். மதுபோதையிலிருந்த குறித்த நபர் நடத்துனரிடமிருந்த பயணிகள் சீட்டுப் புத்தகத்தினை பறித்து கிளித்தும் எறிந்துள்ளார். தாக்குதலுக்குள்ளான பேரூந்தின் சாரதி செட்டிகுளம் பொலிசில் புகார் செய்ய சென்றபோது மருத்துவமனையில் பணிபுரியும் தாதியர் தனது செல்வாக்கினைப் பயன் படுத்தி நோயாளிகளை காவிச் செல்லும் அம்புலன்ஸ் வண்டியில் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாரதியை பொலிசார் விசாரணையின் பின்பு செட்டிகுளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொள்வதற்காக பஸ் சாரதியை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இ.போ.ச. சாரதியான ப.சத்தியமூர்த்தி வயது 33 இன்று மருத்துவமனையிலிருந்து சிகிச்சையின் பின்னர் வெளியேறியுள்ளார். மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.