வவுனியா, மூன்று முறிப்பு ஏ9 வீதியில் ஹயஸ் மற்றும் ஹன்ரர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்றைய தினம் காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி குடும்பம் ஒன்றினை ஏற்றிச் சென்ற ஹயஸ் வாகனம் ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் சுண்ணாம்பு பைகற்றுக்களை ஏற்றி வந்த ஹன்ரர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹன்ரர் வாகனம் மூன்று முறிப்பு பகுதியில் காற்று போனமையால் அதன் பின் டயர்களை கழற்றிக் கொண்டிருந்த போது பின்னால் வந்த ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஹயஸ் வாகனத்தில் பயணித்த பெண் ஒருவரும் அவரது மூன்று பிள்ளைகளும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.