வவுனியா ஓமந்தை சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில் இன்று ( 10.10.2015) முதியோர் தினம், சிறுவர் தினம் மற்றும் விசேட தேவைக்குட்பட்டோர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் திரு கா.உதயராசா தலைமை தாங்கினார். மேலும் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு எம்.கே பந்துல கரிச்சந்திரவும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி ச. மோகநாதன் மேலதிக அரசாங்க அதிபர், மற்றும் திரு கு.சிதம்பரநாதன் பீடாதிபதி கல்வியற்கல்லூரி வவுனியா போன்றோரும் கலந்து கொண்டனர்.மேலும் கௌரவ விருந்தினர்களாக செ.சசிகுமார் அதிபர் சண்முகானந்தா வித்தியாலயம், த.தழிழழகன் தலைவர் அரிமா சங்கம் வவுனியா, சி.ரவீந்திரன் நெஸ்லே கொம்பனி வவுனியா போன்ற பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் முதியோருக்கான இலவச மூக்குக்கண்ணாடிகள் வவுனியா பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டது.


படமும் தகவல்களும் – ம.மனோகரன்