தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும் , வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் இவ் விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு கடந்த 23/05/2016 அன்று கூமாங்குளத்தில் அமைந்துள்ள ஓர்கன் நிறுவனத்தில் நடைபெற்றது.
அல்லையூர் சிவா செல்லையா அவர்களின் ஊடாக இவ் விசேட உணவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது . இவ் நிகழ்வில் ஜெர்மனியில் இருந்து வருகைதந்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச இணைப்பாளர் திரு ஜெகநாதன் , அமெரிக்காவில் இருந்து வருகைதந்த திரு கோபி மோகன், வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் திரு பார்த்தீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், பொருளாளர் திரு த.நிகேதன் மற்றும் ஓர்கன் புதுவாழ்வு பூங்காவின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இவ் நிகழ்விற்கு வருகை தந்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச இணைப்பாளர் திரு ஜெகநாதன் அவர்களினால் வேறு ஒரு தினத்தில் விசேட உணவு வழங்குவதற்கான நிதியுதவியும் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.