வவுனியா கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.எம்.பி.நடராஜ் தலைமையில் 18.03.2015 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, முன்னாள் உபபீடாதிபதி திரு.தெய்வேந்திரன், செட்டிக்குளம் கோட்ட கல்விப்பணிப்பாளர் திரு.யேசுதன், வவுனியா தெற்கு உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.ஜனாப் சுபைர், வவுனியா நகரசபை செயலாளர் திரு.சத்தியசீலன், முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.பாலசிங்கம்,
பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓய்வுநிலை அதிபர்கள், ஆசிரியர் மத்திய நிலைய வளவாளர்கள், ஓய்வுநிலை உதவிக்கல்வி பணிப்பாளர்கள், நடுவர்கள், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.