வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிக்கான பரிசுப் பொருட்கள் அன்பளிப்பு
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிக்கான பரிசுப் பொருட்கள் வவுனியா சரவணா சில்க்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையின் பழைய மாணவருமாகிய திரு. இராசையா சூரசங்கரன் அவர்களின் பணிப்பின் பேரில் நிறுவனத்தின் முகாமையாளர்களான திரு. எம்.எஸ். பத்மநாதன் (வவுனியா தமிழ் மகாவித்தியாலய முன்னாள் அதிபர்), எஸ். இராஜேந்திரன் அவர்களினால் பாடசாலை அதிபர் திருமதி. தியாகசோதி தியாகராசா, அவர்களிடம் நேற்று வவுனியா சரவணா சில்க்ஸ் நிறுவனத்தில் வைத்து கையளிப்பு செய்யப்பட்டது.