வவுனியா பாடசாலைகளில் மாணவர்களின் சிகை அலங்காரம் தொடர்பில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவதில்லை.!

205

வவுனியா பாடசாலைகளில் மாணவர்களின் சிகை அலங்காரம் தொடர்பில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவதில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் பிரபல பாடசாலைகளில் ஆண் மாணவர்களின் சிகை அலங்காரம் மற்றும் தாடி வளர்த்து வருதல் தொடர்பாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவதில்லை.

இதன் காரணமாக மாணவர்கள் பொருத்தமற்ற சிகை அலங்காரங்களுடன் பாடசாலைகளுக்கு வருவதனை அவதானிக்க முடிகின்றது.

வட மாகாண கல்வி அமைச்சு மாணவர்களின் சிகை அலங்காரம் மற்றும் உடை தொடர்பாக சுற்றுநிரூபங்களை வெளியிட்டுள்ளது.

அவை சிகை அலங்கரிப்பு நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மாணவர்கள் இவ்வாறு பாடசாலைகளுக்கு அனுமதிப்பது தொடர்பாக அதிபர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

SHARE