வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்வது தொடர்பாக வடமாகாணசபை உறுப்பினர்களிடமோ, அமைச்சர்களிடமோ, பாராளுமன்ற உறுப்பினர்களிடமோ உரிய ஆதாரம் இல்லை. என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் எனது சேவையைக் கழங்கப்படுத்தும் ஒரு விடயமாகவே கருதப்படுகின்றது. இவ்வாறு தெரிவிக்கும வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர.
இதுவரை காலத்துல் 50க்கும் மேற்பட்ட ஆர்பாட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. காணிப் பிரச்சினைகள், வீட்டுப் பிரச்சினைகள் போன்றவையும் இதற்குள் அடங்கும். அரசாங்க அதிபர் என்ற பொறுப்பு வாய்ந்த கடமையை இந்த வன்னிப் பிரதேசத்துக்குளிருந்து கடமையாற்றி வருகின்றேன். இதற்கு சேறு பூசும் வகையில் ஒருசில அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றமை வருத்தமளிக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது வடமாகாணசபை உறுப்பினர்களுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ நான் மதிப்பளிப்பதில்லை என்பது இவர்களது குற்றச்சாட்டு அவ்வாறு நான் நடந்துகொண்டேனானால் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
ஆட்சியில் இருக்கக்கூடிய அரசாங்கம் எதனைச் சொல்கின்றதோ அதற்கு அப்பாற்சென்று எந்தவொரு அரசாங்கமும் செயற்பட முடியாது. மக்கள் நலன் கருதி முடிந்தளவு அரசாங்க அதிகாரிகளுடன் நாமும் பலதடவை முட்டி மோதியிருக்கின்றோம். எமது பதவிக்கு குந்தகம் விளைவிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசும் செயற்பட்டது. நான் மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பளிக்கத் தவறியது என்று கூறுவது சிறுபிள்ளைத் தனமானது. வன்னி மாவட்டத்தில் பிரதிபலிக்கின்ற ஒவ்வொரு மக்கள் பிரதி நிதிகளும் என்னை தனிப்பட்ட ரீதியாகவும், தொலைபேசியூடாகவும் தொடர்புகொண்டு அவர்களுக்கான உதவிகளைச் செய்து கொடுத்திருக்கின்றேன்.
தமது அரசியலை வளர்த்துக்கொள்வதற்காக தவறான முறையில் ஒரு அரசாங்க அதிபர் நடந்து கொள்கின்றார் என்று குற்றம்சாட்டுவது பொருத்தமற்றதாகும். குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலும், தற்போது இருக்கின்ற அரசாங்கத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாகவும், வடமாகாணசபை தொடர்பாகவும் ஏதாவது ஒரு விடயங்கள் இடம்பெறும் என்றால் அவையணைத்தும் அரசியல் உயர்மட்டங்களில் இருந்தே முடிவுகள் எடுக்கவேண்டிய சூழ்நிலையிருக்கின்றது. என்னால் எவ்வளவு தூரம் மக்களுக்கு உதவிகளைச் செய்து கொடுக்க முடியுமோ அவ்வளவிற்கு நான் உதவிகளைச் செய்துள்ளேன். இது தொடர்பாக எந்தப் பிரச்சினைகளையும் எதிர்நோக்க நான் தயாராக இருக்கின்றேன்.
மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பளிக்கவில்லையென்று சிறுபிள்ளைத் தனமாகக் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவர் இவ்வாறு கூறினாலும் வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவர்கள் நான்கு தடவைகள் நடமாடும் சேவை நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு பணித்தபொழுதிலும் இன்னும் இரண்டு கூட்டங்களை அரச அதிபர் என்ற வகையில் ஒழுங்குபடுத்தித் தாருங்கள் என்று கேட்டபொழுதிலும் அதனை அவர் ஒழுங்கபடுத்தித் தரவில்லை. இதிலிருந்து வடமாகாணசபையினருக்கு மதிப்பளிக்கக் கூடாது அவர்கள் சொல்வதைச் செய்யக்கூடாது என்ற பாணியில் செயற்பட்டு வருகின்றார். என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏனைய வடமாகாணசபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பு,வ லிங்கநாதன் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவருக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எவை எவ்வாறு இருப்பினும் தமிழ் பேசும் பிரதேசம் என்ற வகையில் தமிழ் அரச அதிபர் நியமிக்கப்படுவது மக்களின் விருப்பம் என்பதை அவர் உணர்ந்து கொண்டால் சரி.