வவுனியா முன்னாள் பட்டினசபைத்தலைவர் வேலுச்சேமன் என அழைக்கப்படும் ச. சுப்பிரமணியம் இயற்கை எய்தினார்

302
வவுனியா முன்னாள் பட்டினசபைத்தலைவர் வேலுச்சேமன் என அழைக்கப்படும் ச. சுப்பிரமணியம் தனது 89 ஆவது வயதில் இன்று (4.2) யாழ் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும் வவுனியா மாவட்ட தலைவராக நீண்ட காலம் செயற்பட்டிருந்த இவர் 1958 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப்போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இணைந்து பூசா சிறையில் பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்திருந்தார்.
இதேவேளை வவுனியா பட்டிணசபையின் தலைவராக நீண்ட காலம் செயற்பட்ட இவர் வவுனுpயா நகரத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்கையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்னாரது இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் பின்னா அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். படங்களும் தகவலும்:- காந்தன்
41918503-35a3-4e51-b36a-de917e760f85
SHARE