வவுனியா, வடபகுதி எரிபொருள் விநியோக மையம் இராணுவக் கட்டுப்பாட்டில்

209

வவுனியா வட பகுதிக்கான பிரதான எரிபொருள் நிலையத்தினை படையினரும் பொலிஸாரும் இணைந்து இன்று காலைபொறுப்பேற்றுள்ளனர்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அத்தியாவசிய சேவையாக உட்படுத்தப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை அடுத்து இராணுவத்தினரிடம் இந்தச் சேவை ஒப்படைக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவிற்கு அமைய வவுனியா வடபகுதிக்கான பிரதான எரிபொருள் விநியோக நிலையத்தினை படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

அத்துடன், நாட்டிலுள்ள சகல எரிபொருள் விநியோக நிலையங்களையும் இன்று முதல் இராணுவத்தினர் பொறுப்பேற்று விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

எரிபொருள் விநியோக நிலையங்களிலுள்ள ஊழியர்கள் நேற்று முதல் பணிப் புறக்கணிப்பினை மேற்கொண்டு வந்த நிலையில் தடைப்பட்டிருந்த எரிபொருள் விநியோகம் இனி வழமையாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE