வவுனியா வர்த்தக சங்கத்தால் பாடசாலை உபகரணங்கள் அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

219

வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் ரி.கே.இராசலிங்கத்தால் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் இன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார விடம் கையளிக்கப்பட்டது. பொருட்களை பெற்றுக்கொண்டு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார

வவுனியாவில் அரசாங்க அதிபராக பதவியேற்றதன் பின் விதவைத்த தாய்மார்கள் தன்னை வந்து சந்தித்திருந்தார்கள் அவர்களுக்கும் பெண்களை தலமையாக கொண்டிருக்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கும் உதவி மாவட்ட செயலாளர் ஊடாக இப்பொருட்கள் வழங்கி வைக்கப்படும் அத்துடன் எதிர்காலத்தில் ‘வவுனியா மாவட்ட கல்வி அமையம்’ என்ற ஒரு அமைப்பை அமைக்கவுள்ளோம் அதனூடாக தொடர்ச்சியாக கல்விக்கான உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.  தகவலும் படங்களும் :- காந்தன்

14b70e5f-f6da-42b7-bb8e-911e6cab316e 87c6707c-0f5f-4139-911d-6f873af6ecfc 8390635f-9c1e-4637-ae11-1bad002c9942

SHARE