வவுனியா விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் கையளிப்பு

199

வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு வவுனியா விவசாய பண்ணையில் இன்று (13.09) விவசாய திணைக்களத்தின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட சுமார் 40.27 மில்லியன் ரூபாவில் 8.32 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணத்தொகுதியே இன்று வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 420 பயனாளிகள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்ட உபகரணத் தொகுதியில் சிறிய ரக உழவுஇயந்திரம், மா அரைக்கும் இயந்திரம், சிறுகைத்தொழில் முயற்சிக்கான உபகரணத்தொகுதிகள் மற்றும் முட்கம்பிகள், விதைநெல், தானிய பாதுகாப்பு பீப்பாக்கள் என்பன வழங்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான எம். தியாகராசா, செ. மயூரன், ஏ.ஜயதிலக உட்பட விவசாய திணைக்கள அதிகாரிகள் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

தகவலும் படங்களும்:- காந்தன்

 

unnamed-3

unnamed-4

unnamed-1

unnamed-2

unnamed

unnamed-5

 

SHARE