வவுனிய வலயக்கல்வி அலுவலகத்துக்கு முன்பாக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

366

வவுனியா தெற்கு வலயகல்வி அலுவலகம் முன் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு

போராட்டம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட

மாணவி வித்தியாவுக்கு நீதிகேட்டு எதிர்காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பை

உறுதிப்படுத்தவும் இன்று (20) மாலை 02.00 மணியளவில் வவுனியாவில் தெற்கு

வலயகல்வி அலுவலகம் முன் ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக கலந்துகொண்ட வன்னிபாராளுமன்ற உறுப்பினர்

செல்வம் அடைக்கலநாதனிடம் ஆசிரியர் சமூகத்தால் ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கு

மகஜர் ஒன்று வழங்கப்பட்டதுடன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்

ஜி.ரி.லிங்கநாதனிடம் வடமாகாண முதலமைச்சருக்கு கையளிப்பதற்காக மகஜர் ஒன்றும்

வழங்கப்பட்டது.

நிகழ்வில் வன்னிபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,

வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், புதிய ஜனநாயக மாக்சிச-

லெனினிசக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் பிரதீபன் ஆகியோர்

கலந்தகொண்டனர்.

 

IMG_20150620_144113 IMG_20150620_144135 IMG_20150620_144212 IMG_20150620_144224 IMG_20150620_144232 IMG_20150620_144246 IMG_20150620_144325 IMG_20150620_144345 IMG_20150620_144650 IMG_20150620_144745

 

unnamed (3) unnamed (4) unnamed (5)

SHARE