வாகன உதிரிப் பாகங்களை திருடிய இருவர் கைது

269
பாதையோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் பெறுமதியான உதிரிப்பாகங்ளை திருடி விற்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இருவரை கண்டி கட்டுகஸ்தொட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறி்த்த இருவரும் கட்டுகஸ்தொட்ட,கடுகண்ணாவை, தவுலகல, மற்றும் பேராதெனிய பிரதேசங்களிலே இவ்வாறான திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்களிடமிருந்து 18 மின்கலன்கள், 9 டயர்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை இருவரும் இன்று கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE