பீ. ஆர். சீ. விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் வீரரான 23 வயதான பூர்ண சீ. பிரபாஷ்வர வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரலஸ்கமுவ, ரத்தனப்பிட்டிய பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் இவர் உயிரிழந்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் சென்ற மோட்டார் சைக்கிள், கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் சென்ற ஜீப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த கிரிக்கெட் வீரர் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.