ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பானில், Utsunomiya orion கல்லூரியில் கல்வி கற்றுவந்த இலங்கை மாணவர் ஒருவர் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அவர் ஓட்டிய மோட்டார் வாகனம், வாகனமொன்றுடன் மோதியமையினால் குறுித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த மாணவன், கம்பஹா – கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த இசுரு அபேதிர என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த மாணவனின் இழப்பானது, அப்பகுதியினரை பெரும் சோகத்தில் அழ்த்தியுள்ளது.