வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புளியங்கன்றலடி கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு

139

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புளியங்கன்றலடி கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.

கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ம.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி மற்றும் ஆலய நிருவாக சபையினர், மாதர் சங்க உறுப்பினர்கள், மீன்பிடிச் சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கிராம அபிவிருத்தி சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கமைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயாணந்தமூர்த்தி தனது சொந்த நிதியில் இருந்து தளபாடங்களை வழங்கி வைத்தார்.

இதன்போது மேலும் என்னாலான அனைத்து உதவிகளையும் இப்பிரதேசத்திற்கு வழங்குவேன் எனவும் மக்களிடம் வாக்குறுதியளித்தார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90

 

SHARE