வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள்.

516

 

வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க
நாள்.

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று வெற்றிகரத் தாக்குதலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரின் 07ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளான…..

வான்கரும்புலிகள் கேணல் ரூபன் – லெப்.கேணல் சிரித்திரன்

ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் ‘நீலப்புலிகள்’ என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்கள் வரலாறு என்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் நிலைத்து நிற்க்கும் .
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம்

10478236_919967691347895_1837125230391132597_n 10806407_921291537882177_7703609641279733737_n 10881726_929739707037360_1635757601951759868_n

 

SHARE